மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் விலக்கு


வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் நோய் தொற்று இல்லை என்ற சான்று, அதாவது 96 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனாவுக்கான பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் அந்த சான்றிதழ் இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மேலும் தமிழகத்திற்கு வந்து விட்டு அடுத்த 72 மணி நேரத்தில் சொந்த ஊருக்கு திரும்பும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது


மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களில் கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.