கைகாசு போட்டு படத்தை ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் தியேட்டரை மூடும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து சென்னைவாசிகள் மீள்வதற்குள், சென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கிவந்தஅகஸ்தியா திரையரங்கம் செப்.1ம் தேதி நிரந்தரமாக மூடப்படுகிறது.
கடந்த 1967-ம் ஆண்டு திறக்கப்பட்ட அகஸ்தியா திரையரங்கில் முதல் திரைப்படமாக ‘பாமா விஜயம்’ திரையிடப்பட்டது. வட சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள இந்த திரையரங்கம், 1,004 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய திரையரங்காகும்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முழு சுகாதார வசதிகளுடன் இயங்கிய நான் - ஏசி திரையரங்கு ( NON A/C) என்ற பெருமைக்குரிய அகஸ்தியா 70 எம்.எம் திரையரங்கு வழியே அதன் நிர்வாகத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாகப் பெரிதாக வருமானம் எதுவும் இல்லாததால் தற்போது திரையரங்கை மூட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘காவல்காரன்’, சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘சிவந்த மண்’, ‘சொர்க்கம்’ உள்ளிட்ட படங்கள் இத்திரையரங்கில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முழு சுகாதார வசதிகளுடன் இயங்கிய 70 எம்.எம் திரையரங்கான அகஸ்தியா, பெரிய அளவில் வருமானம் இல்லாததால் மூடப்படுகிறது.
அதேபோல, ரஜினி நடிப்பில் வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்', 'பைரவி', 'ப்ரியா', 'படிக்காதவன்' உள்ளிட்ட படங்களும் கமல்ஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்', 'தேவர் மகன்' ஆகிய படங்களும் சூர்யா நடிப்பில் வெளியான 'காக்க காக்க' திரைப்படமும் வெள்ளிவிழா கண்டன.
அகஸ்தியா திரையரங்கு அமைந்துள்ள இடத்தில் அடுத்து எம்மாதிரி புதிய கட்டிடம் , திறக்கப்படும்? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விசாரித்தபோது, 'கரோனா தொற்று வைரஸ் அச்சுறுத்தல் குறையத் தொடங்கிய பிறகுதான் அதுகுறித்து முடிவெடுக்கப்படும்!' என்றனர்.
அஜித் நடிப்பில் அறிமுகமான 'அமராவதி' பின்னர் நடித்த 'தினா' ஆகிய படங்களும் இந்த திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
தமிழின் முன்னணி நடிகர்கள் பலரின் திரைப்பட படப்பிடிப்பு காட்சிகளும் இந்த திரையரங்கில் எடுக்கப்பட்டிருக்கிறது.
வடசென்னை பகுதியில் மிக முக்கியமான திரையரங்கமாக இருக்கும் அகஸ்தியா மூடப்படுவது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.