உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே சென்றாலும், தற்பொழுது பல நாடுகளில் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது.
சில இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் உபயோகத்திற்கும் வந்துவிட்டன.
இந்நிலையில், ஜப்பானிய அரசு தனது குடிமக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் ஜப்பானிய குடிமக்களுக்கு தேவையான தடுப்பூசி போதிய அளவில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.