கர்நாடகாவில் அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரிகளை திறக்கத் திட்டம் உள்ளதாகவும், மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை சார்ந்து கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் சி.என். அஷ்வத் நாராயன் தெரிவித்துள்ளார்.
வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குள் வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதுபோன்று, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதும் இல்லை.
எனவே வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இனி கைகளில் சீல் வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.