மருத்துவமனைக்கு மனைவியை சைக்கிளில் அழைத்து சென்ற கணவர்


கொரோனா ஊரடங்கு சமயத்தில் வலியால் அவதிப்பட்டு வந்த மஞ்சுளாவை அறிவழகன் கடந்த மார்ச் 29ம் தேதி தனது சைக்கிளில் வைத்து கும்பகோணத்தில் இருந்து 120கி.மீ தொலைவில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்ற சம்பவம் சமூக ஊடகங்களில் பரவ அறிவழகனின் அன்பை பலர் பாராட்டியதோடு, பணம், பொருள் கொடுத்து உதவினார் முன்வந்தனர்.


மருந்து, மாத்திரைகளில் வாழ்ந்து வந்த மஞ்சுளா 23.08.2020அதிகாலை உயிரிழந்துள்ளார்.


தனது மனைவியின் இறப்பு  குறித்து அறிவழகன் கூறுகையில் , பலரிடம் பணம் கடன் வாங்கியும், பலர் உதவியும் மனைவிக்கு மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்து கவனித்தேன்.


இருப்பினும் அவரை என்னால் காப்பாற்ற முடியாமல் போனது என்று மனமுடைந்து கூறியுள்ளார்.