சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, கப்பல் போல் தெருவில் மரம் ஒன்று இரவு பெய்த மழையில் வேருடன் சாய்ந்தது .
அப்பகுதி மக்கள் அதிகமாக நடமாடும் பகுதி அங்கு சில நாட்களாக தெருவில் சாக்கடை அடைத்து கழிவுநீர் தெருவில் பொங்கி ஓடுகிறது.
கொரோனா தொற்று அதிகரிக்கும் வேளையில் கழிவுநீரில் தொற்று பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி பொதுமக்கள் மிகவும் வேதனை அடைகிறார்கள்
இதை சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்வார்கள் என ஆவலுடன் அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு
உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரமக்குடி,உளுந்தூர்ப்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ கொரோனா தொற்று உறுதி!
பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், உளுந்தூர்ப்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்து வருகிறது. இதில், எம்எல்ஏ.,க்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா உறுதியானது.
செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்.