திருச்சியில் ஜூன் 26-ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் கே.பழனிசாமி, விவசாய பிரதிநிதிகளை தனியாக சந்தித்தார்.
திருச்சி மாவட்டம் புலியூரைச் சேர்ந்தவர் ஏ.நாகராஜன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவராக இருந்தார். இவர், புலியூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும், வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தியுள்ளார்.
இந்தநிலையில், உடல் நலக் கோளாறு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையிலும், பின்னர் நேற்று (ஜூலை 1) திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று (ஜூலை 2) பிற்பகல் உயிரிழந்தார். அங்கு நாகராஜனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
12 பேர் அடங்கிய விவசாய பிரதிநிதிகள் பட்டியலில் புலியூர் நாகராஜனும் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில், கரோனாவால் அவர் உயிரிழந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த சென்னையைச் சேர்ந்த 48 வயதான பெண்ணும் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 1) நள்ளிரவு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் அரசு வழிகாட்டுதலின்படி இன்று (ஜூலை 2) காலை ஓயாமரி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம்.
செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி வருகிறோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த ஆலோசனைகள் அரசால் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது, அவர் செய்யும் விமர்சனம், ஆலோசனை எதுவானாலும் ஊக்கப்படுத்தும் விதத்தில் இருக்கவேண்டும், ஆனால் காயப்படுத்தும் விதத்தில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
_________________
புகைபிடித்தால் கொரோனா ஆபத்து அதிகரிக்கும்.. WHO எச்சரிக்கை..!
காரைக்காலில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும்; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்