ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடமை ஆக்கப்பட்டது


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும்  நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர் 



இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. 


24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது.


ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது.


மேலும் ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியை செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடமை ஆக்கப்பட்டது


நினைவில்லமாக்கும் நடவடிக்கையாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடமை ஆக்கப்பட்டது


வேதா நிலையத்தை அரசுடைமையாக்குவதற்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும் என ஜெ.தீபா கூறியுள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கு எதிராக மேல்முறையீடு செய்வேன் எனவும் கூறியுள்ளார்.