நடிகர் சங்க தேர்தல் வழக்கு


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


2019 ஜூனில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 


மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதியதாக தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும். உறுப்பினர்களை சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும்.


தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறபித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.


இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதி முழு விசாரணையையும் நடத்தி முடித்து விடலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.