கொரோனா வைரஸ் நோய்-சித்த மருந்துகள்


அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும், சித்த மருத்துவத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிக்லோரோகுவின் உள்ளிட்ட மருந்துகள் சில நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மருத்துவர்களின் பரிந்துரையின்படி, சில மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.


 



தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளர், 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.