சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக மருத்துவர் ஜெயந்தி நியமனம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைமுதல்வர் ( டீன்) ஆக இருந்த ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முத்துராஜ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்குப்பின் காவலர் முத்துராஜ் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஜப்பான் நாட்டின் உலக நிதி நிறுவனமான ஜிக்கா கமிட்டி மதுரை எய்ம்ஸ்க்கு கடனுதவி வழங்க முன்வந்தது. இக்கமிட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுரை வந்து, கட்டுமான இடங்களை பார்வையிட்டு திருப்தி தெரிவித்ததுடன், வரும் செப்டம்பர் மாதம் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் உறுதியளித்தது.
இதையடுத்து நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய அரசிதழில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20,903 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகமாக கரோனா உறுதி செய்யப்படதில்லை.
இதில் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி, தெலங்கானா, கா்நாடகத்தில் அதிக பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், 379 போ் உயிரிழந்ததையடுத்து ஒட்டுமொத்த கரோனா உயிரிழப்பு 18,213-ஆக அதிகரித்துவிட்டது.
கரோனாவைத் தடுப்பதற்கான கோவேக்சின் தடுப்பு மருந்தை மனிதா்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் ஆராய்ச்சிகள், சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளன.
இதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அளித்துள்ளது. வரும் 7-ஆம் தேதி முதல் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.