கொரோனா வைரஸ் பரிசோதனைஇந்தியா இரண்டாம் இடம்


 'உலக அளவில், அதிக அளவு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது; இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின், டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம். உலக நாடுகளுக்கும் நாம் உதவி செய்து வருகிறோம்.


பொருளாதார பாதிப்பில் இருந்து அமெரிக்கா மீண்டு வருகிறது. ஒரு சில இடங்களில் வைரஸ் பாதிப்பு உள்ளது. அதை சமாளிக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளோம்.இந்த வைரசுக்கு மிக விரைவில் தடுப்பூசியை கண்டுபிடிப்போம் என, உறுதி கூறுகிறேன்.


சர்வதேச அளவில், அமெரிக்காவில் தான் அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டுஉள்ளது.இதுவரை, ஐந்து கோடி பேருக்கு பரிசோதனை செய்துள்ளோம். அதற்கடுத்து இந்தியாவில் தான், அதிகபட்சமாக, 1.2 கோடி பேருக்கு பரிசோதனை செய்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.