பிரதோஷ மஹிமை


பிரதோஷ மஹிமை



பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது.



அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.


பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.


இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் அநுட்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்


மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும்.


குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோசகாலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது


சனிப் பிரதோஷம் தோறும் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியே மானுட வடிவில் பூமிக்கு வந்து கொடையளிக்கும் நன்னாள்

சனிப் பிரதோஷ பூஜையில் முழுப் பங்கு கொண்டு, ஏழைகளுக்குக் குடைகளையும் அரிசி, உணவு தானியங்களையும், காய்கறிகளையும் ஒரு பெரிய மூங்கில் கூடையில் வைத்து, ஒரு குடும்பத்திற்கேனும் வரும் வகையில் அளித்துச் சனிக் கொடைப் பணியை நிறைவு செய்திடுதல் உத்தமம்.
  
இதனால் *சனி தசை, சனி புக்தி, சனி அந்தரத்தில் உள்ளோர் நலம் பெறுவர்.*

கடும் வெயிலில் பணி புரியும் சாலைத் தொழிலாளி, வயல் பண்ணை உழவர் போன்று வெயிலில் கடுமையாக உழைக்கும் தொழிலாளிக்கு அருகில் நின்று,

அவர் வெயிலில் வேலை செய்கையில், குறைந்தது ஒரு மணி நேரமாவது குடை பிடித்து,அவருக்குக் காலணிகள், குடை, வயிறு நிறைய உணவளித்து மகிழ்வித்திடில்,

அவருடைய ஒரு நாள் சனிக் கொடைச் சந்தோஷமே, உங்கள் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு, சந்ததகளுக்கும் தர்மக் கொடையாய், பிரமாதமான சனிக் கொடையாய் நிலைத்து நின்று காக்கும்.

வர வேண்டிய முறையான பாக்கிகளைப் பெற்றுத் தரவும் உதவும்.

மேலும் கால் மற்றும் கபால சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளையும் பெற்றுத் தரும்.

ஓம் நமசிவாய
ஓம் நம சிவய
ஓம் நம சிவ ஓம்
ஓம் சிவாய நம
ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...
சிவமே அன்பு....


திருச்சிற்றம்பலம்


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்