நாயன்மார்கள் : அதிபக்தர்


நாயன்மார்கள் :அதிபக்தர்


அந்த நுளமபாடி சோழ நாட்டின் கடற்கரையில் இருந்த ஊர். நாகப்பட்டினம் எனும் அன்றைய பெருநகருக்கண்மையில் இருந்தது. அது மீன்பிடி கிராமம்,  மீனும், சங்கும் , சிப்பியும், சங்கினை அறுத்து செய்த‌ வளையலும் நிரம்பக் கிடைக்கும் ஊர். பரதவர்கள் நிரம்பிய குடியிருப்பு.


அந்த பரதவக் கூட்டத்தில் ஒருவர் தான் அந்த அடியவர்.  அவரின் இயற்பெயர் அறியப்படவில்லை.  ஆனால் அவரின் இயல்பான காரியத்தால் அதிபத்தர் என்ற காரண பெயர் வந்தது. இயல்பான காரியம் என்னவென்றால் வேறு ஒன்றுமில்லை. சிவன் மேலான பக்தி, யாராலும் காட்டமுடியாத பக்தி, மகா அர்ப்பணிப்பான பெரும் அன்பான பக்தி.


இதனால் அவர் அதிபக்தர் என அழைக்கப்படலானார், அது அதிபத்தர் என திரிந்து நிலைபெற்றுவிட்டது.


அதி என்றால் மிகப் பெரிய என்ற பொருளில் வரும். அதிவீரர், அதிமதுரம், அதிமேதாவி, அதிபர் எனும் வரிசையில் அதிபத்தர்.


(பத்தன் என்பதன் பொருள் மாசுமறுவற்ற குற்றமற்றவன் என்பது இன்னொரு விஷயம்.)


அந்த அதிபத்தர் மிகப்பெரும் சிவனடியார், கடலில் மீன்பிடித்து வந்து விற்பது அவரின் தொழில், அனுதினமும் காலை சிவனை நினைந்து வழிபட்டு, மடியேறி கடல் புகுந்து, வலைவீசி, மீன்பிடித்து அந்த மீன்களில் மிகப் பெரியதும் நல்லதுமான மீனை சிவனுக்கு அர்ப்பணமாக கடலிலே சிவன் நாமத்தை சொல்லி விட்டுவிடுவார்.


அக்கால மரபு அது. விவசாயி என்றால் தன் விளைச்சலில் சிறந்ததை கோவிலுக்கு செலுத்துவான். ஆடுமாடு வளர்ப்பவன் என்றால் மந்தையில் சிறந்ததை கோவிலுக்கு காணிக்கையாக்குவான்.


 தொடரும்


பக்தியுடன் மோகனா செல்வராஜ்