மாநிலச் செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா? என முதன்மை தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அட்டை அவசியம் :
தமிழகத்தில் உள்ள சலூன்கள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்வோர் ஆதார் அட்டை அவசியம் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் :
24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
அரசாணை வெளியீடு :
தமிழகத்தில் இறுதி ஊர்வலங்கள், சடங்குகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம் என்று இருந்ததை, 50 பேர் வரை பங்கேற்க அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இயல்பு நிலை திரும்ப தொடங்கியது :
தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று பேருந்துகள் ஓடியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். நகை, துணிக்கடைகள் உட்பட பெரிய கடைகளும் திறக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ளது.
ஜூன் 15ஆம் தேதி வரை :
மதுரை மண்டலத்திற்குட்பட்ட அரசு பேருந்துகளில் மார்ச் மாத பஸ் பாஸ் ஜூன் 15ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மதுரை மண்டல போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு :
மார்ச் 22ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயண கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொள்வதற்கான தேதிகளை திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.