கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில், மூன்று மாதத்திற்கும் மேலாக, டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
பலர், வீட்டிற்கு செல்லாமல், மருத்துவமனைகள், ஓட்டல்களில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அவர்களுக்கு, அரசு அறிவித்த நிவாரண நிதி, இதுவரை வழங்கப்படாதது, சுகாதார பணியாளர்களை சோர்வடைய வைத்துள்ளது
தமிழகத்தில் இதுவரை, 300க்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இரண்டு செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர்.
தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருபவர்களுக்கு, நம்பிக்கை தரும் வகையில், அரசு அறிவித்த நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு, அரசு அறிவித்த, ஒரு மாத சம்பளம் மற்றும் நிவாரண நிதியை வழங்க வேண்டும்' என, அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.