கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காக்க நேரத்தை செலவிட வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அரசு கடமையை தவறியதால் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்துக்குச் சென்று இருக்கிறது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.கொரோனா பாதிப்பு பற்றி சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி தரும் தகவல்கள் முரண்பாடாக இருக்கிறது எனக் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்
*********************************
தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்திய நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
************************
கொரோனா நோயாளிகளை ஆயுர்வேத சிகிச்சை முறையில் 14 நாட்களில் குணப்படுத்த முடியும் என பதஞ்சலி ஆயுர் வேதா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.
************************
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்தை நெருங்கியது.
****************************
குறிப்பிட்ட நகரங்களில் அல்லது மாநிலங்களில் மட்டுமே கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருக்கிறதே தவிர, நாடு முழுவதும் இல்லை - வானதி சீனிவாசன் (பா.ஜ.க.)
*****************************
மான் கி பாத் நிகழ்ச்சி: மக்களிடம் ஆலோசனைகள் கேட்கும் பிரதமர் மோடி