நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால வருமானத்தை இழந்த கூழித் தொழிலாளிகள் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இ
அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அனைவரும் வியக்கும் அளவிற்குரூ. 3 கோடியை கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்தார்.
அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், ஃபெப்சி யூனியனுக்கு ரூ.50 லட்சம், நடனக் கலைஞரின் சங்கத்திற்கு ரூ. 50 லட்சம் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ருபாய் 25 லட்சம் மற்றும் ராயபுரத்தில் உள்ள கூழித்தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சமும் வழங்குவதாக அறிவித்தார்.
நடிகர் ராகவா லாரன்ஸ், இன்னும் ஒருபடி மேல் சென்று, அயராது உழைக்கும் இன்னும் ஒருபடி மேல் சென்று, அயராது உழைக்கும் தூய்மைப்பணியாளர்களுக்கு, தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் ரூ.25 லட்சத்தை வழங்குவதாக அறிவித்திருந்தார்.
உறுதியளித்தபடி தூய்மை பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 3,385 தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.