புதுச்சேரி- எல்லை

 



கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மருத்துவ அவசர தேவையை தவிர்த்து வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என முதலமைச்சர் நாராயணசாமி நேற்று அறிவித்திருந்தார். 


மருத்துவ தேவைக்காக செல்பவர்கள் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். போலீசாரின் தீவிர சோதனை காரணமாக மாநில எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.


இதன்படி, புதுச்சேரி எல்லைகளான கன்னிக்கோவில், மதகடிப்பட்டு, கோரிமேடு, காலப்பட்டு ஆகிய பகுதிகளில், புதுச்சேரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, புதுச்சேரி வரும் வாகனங்களை, இ-பாஸ் இருந்தும்கூட போலீசார் அனுமதிக்காமல் திருப்பி அனுப்புகின்றனர்.