கொரொனா நோய்த்தொற்றில் தமிழகம் - குறிப்பாக சென்னை- பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதைத் தடுக்க நடவடிக்கைகளை முடுக்கிவிடவேண்டிய தமிழ்நாடு அரசோ, இப்போதுதான் தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களைத் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துதல் தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மனையில் வை.இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ தமிழக அரசுக்கு நிச்சயம் பொருந்தும்.
சரி, இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால்,தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்தான் எத்தனைக் குழப்பங்கள்!
கோயம்புத்தூருக்கு “ Koyampuththoor” சரியாம். ஆனால், திருவில்லிபுத்தூருக்கு “Thiruvillipuththur” தான் சரியாம்!
இந்த வேலூர்க்காரர்களைப் பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது.
“Veeloor” ஆக்கி விட்டார்கள்! என்று திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு பதிவிட்டு விமர்சித்துள்ளார்
கொரோனா நோய்த்தொற்றில் தமிழகமே பற்றி எரியும் வேளையில் ஊர் பெயர்களை மாற்றி தமிழக அரசு ஆனந்தப்படுவதாக திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.