கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தனியார் பேருந்து சேவையும் இன்று தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்துகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அமர்ந்து செல்லுதல், கட்டாயம் முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது