தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு பயணிகள் கூட்ட நெரிசல் காணப்படுவதால் கரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளில் 65 சதவீதம் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பேருந்துகளில் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகளில் இந்த நடைமுறைகள் ஏதுவும் கடைபிடிக்கப்படவில்லை. பல பேருந்துகளில் வாசலில் தொங்கிக் கொண்டு செல்லும் அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
பயணிகளில் சிலர் முகக்கவசம் அணியாமலே பயணிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே கரோனா தொற்றுவே கமாகப் பரவி வரும் நிலையில், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கரோனா தொற்று மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பேருந்துகளில் அரசு அறிவித்த நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்பு வாசகர்களே....