மு.க.ஸ்டாலின் கண்டனம்


கொரோனாவில் உயிரிழந்தவர்கள் விவரங்களில் சுகாதாரத் துறையின் கணக்கும், சென்னை மாநகராட்சியின் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது . 


உலகத்திலேயே ஊரடங்கை, இத்தனை ஓட்டை உடைசல்களோடு, இவ்வளவு கேவலமாக, அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்கும். முழு ஊரடங்கு - ஊரடங்கு - தளர்வு ஊடரங்கு - தளர்வில் மேலும் தளர்வு என்று ஊரடங்குச் சட்டத்தையே தரம் தாழ்த்தி, தொடர்ந்து கொச்சைப்படுத்தியது தமிழக அரசு. 


தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்குக் காலம் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு காலத்தை விட, ஐந்தாம் கட்ட ஊரடங்கு காலத்தில், கொரோனா பரவல் அதிகம் ஆகி வருவதைத் தான் அரசாங்கம் வெளியிடும் அறிக்கைகளும், அவற்றில் உள்ள தரவுகளும் சந்தேகத்திற்கு இடமின்றிச் சுட்டிக்காட்டுகின்றன  எ‌ன்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வௌயிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்