செய்தி துளிகள்
நாளை குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி முதல்வர் வேண்டுகோள்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்-- முதல்வர் பழனிசாமி
*************
சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
சேலம் லீபஜார் பகுதியில் கட்டப்பட்டுள்ள ரூ.46,35 கோடி மதிப்பிலான மேம்பாலத்தையும் திறந்து வைக்கிறார் முதல்வர்
**************
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்தது
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1000 கன அடியிலிருந்து 1,500 கன அடியாக அதிகரிப்பு
***************
ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்
கொரோனா மற்றும் நிதி பிரச்னை காரணமாக திட்டம் ஒத்திவைப்பு என தகவல். இந்தாண்டு இறுதியில் செலுத்தப்படவிருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாதத்துக்கு ஒத்திவைப்பு
***************
புனேவில் 47 கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் : 6 பேர் கைது
*************
ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.11.61 கோடி அபராதம் வசூல்
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,15,938 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு. இதுவரை 4,61,582 வாகனங்கள் பறிமுதல்; 5,70,892 வழக்குகள் பதிவாகின- காவல்துறை