செய்தி துளிகள்

செய்தி துளிகள்


நாளை குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி முதல்வர் வேண்டுகோள்.


குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்-- முதல்வர் பழனிசாமி


*************


சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி


 சேலம் லீபஜார் பகுதியில் கட்டப்பட்டுள்ள ரூ.46,35 கோடி மதிப்பிலான மேம்பாலத்தையும் திறந்து வைக்கிறார் முதல்வர்


**************


கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்தது


 தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1000 கன அடியிலிருந்து 1,500 கன அடியாக அதிகரிப்பு


***************


ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் 


கொரோனா மற்றும் நிதி பிரச்னை காரணமாக திட்டம் ஒத்திவைப்பு என தகவல்.  இந்தாண்டு இறுதியில் செலுத்தப்படவிருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாதத்துக்கு ஒத்திவைப்பு


***************


புனேவில் 47 கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் :  6 பேர் கைது


*************


ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.11.61 கோடி அபராதம் வசூல்


ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,15,938 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு. இதுவரை 4,61,582 வாகனங்கள் பறிமுதல்; 5,70,892 வழக்குகள் பதிவாகின-  காவல்துறை