பேச்சுவார்த்தைக்கு சீனா


கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்துள்ளனர்.


சீனா தரப்பில் உயிரிழப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.ஆனால் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வீரர்களின் உயிரிழப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


உயிரிழந்த ராணுவ வீரர்களின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அவர்களது தியாகத்தை நாடு மறக்காது என்றும் இந்த கடின நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நாடு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 


இந்தியாவுடன் இனியும் மோதல்கள் ஏற்படுவதை விரும்பவில்லை என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது


இந்திய- சீன ராணுவ வீரர்களின் மோதலையடுத்து, எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.