கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் 50க்கும் மேற்பட்ட நகராட்சிகளுக்கு மத்திய குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு தொற்றுப் பரவலும் அதிகரித்து வருகிறது.
இந்த இடங்களில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் தேவையான தொழில்நுட்ப உதவியை மாநில அரசுகளுக்கு வழங்கும் வகையில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் பல்துறை சார்ந்த உயர்மட்ட மத்திய குழுக்களை அனுப்பி உள்ளது.
.