தமிழக அரசு - செய்திகள்.
தேர்வுத்துறை உத்தரவு:
பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாள்கள், மதிப்பெண் பதிவேடுகள் ஆகியவற்றை மாணவர்களின் பதிவெண் அடிப்படையில், மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
*************************
வரும் வெள்ளிக்கிழமை முதல்5 நாட்களுக்கு நியாய விலை கடைகள் இயங்காது:
ஆயிரம் ரூபாயை வீடு வீடாக விநியோகிக்கும் காரணத்தால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (நாளை) முதல் 5 நாட்களுக்கு நியாய விலை கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
***************************
அரசு ஊழியர்களின் விடுப்புகள், பணி நாளாகவே கருதப்படும்:
பேருந்து சேவை முற்றாக முடங்கிய காலத்தில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கான விடுப்புகள், பணி நாளாகவே கருதப்படும் என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் அறிவித்துள்ளார்.
*************************
சென்னை காவல்துறை எச்சரிக்கை:
பொதுமுடக்கத்தின் போது அனுமதி சீட்டு இன்றி வாகனங்களில் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
************************
21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்:
ராமநாதபுரம், மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தில் இந்தியா-சீன எல்லையில் வீரமரணம் அடைந்த பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.