செய்தி துளிகள்
வங்கிகள் மூலம் ரூ.17,705 கோடி கடன் வழங்க அனுமதி - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
********
திருவாரூரில் நீதிமன்றங்கள் மூடப்பட்டதால் வழக்குகள் வராமல் தவித்த "வழக்கறிஞர் " சாராயம் காய்ச்சி சுய தொழில் செய்ததால் கைது ..
********
சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து மூலிகை நீரை அருந்திய இருவர்... நூதன தண்டனை வழங்கிய வனத்துறை!விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அத்துமீறி நுழைந்த இருவர், அங்குள்ள நீர் கொடிகளை வெட்டி, அதிலிருந்த மூலிகை நீரை அருந்திடும் வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.
********
கோவையில் திடீரென ஒரு இடம் மக்களின் செல்ஃபி கார்னராக மாறியுள்ளது. பயன்பாட்டுக்கு வரும் முன்னரே, சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.