ரியல் ஹீரோ


கொரோனா காலத்தில் மகாராஷ்டிர மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக திகழ்கிறார் வில்லன் நடிகர் சோனு சூட்.


வேலையை இழந்து வாடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் பேருந்து ஏற்பாடு செய்து சொந்த அவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.


மேலும் தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். 


அவரது நடிவடிக்கைகளுக்கு பின்னால் பாஜக இருப்பதாகவும், விரைவில் அவர் மகாராஷ்டிராவின் பிரபலங்களில் ஒருவராக வலம் வருவார் என்றும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்திருந்தார்.


மகாராஷ்டிர அரசு, மக்களுக்கு செய்யத் தவறிய உதவிகளை சோனு சூட் செய்வதாக மக்கள் கூறி வந்தனர்.


இந்நிலையில் ஆளும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் சோனு சூட்டை கடுமையாக தாக்கி எழுதியிருந்தனர்.


இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களுக்காக பாடுபடும் சோனு சூட்டை இழிவுப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளனர்.