திருமழிசை வியாபாரிகள் கோரிக்கை


சென்னை திருமழிசையில் மழை பெய்ததில் அனைத்து பகுதிகளிலும் சேரும் சகதியுமாக உள்ளது எனவே வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் வரக்கூடியவர்களுக்கும் வியாபாரம் செய்பவர்களுக்கும் தொற்று ஏற்படக்கூடிய அபாயமாக உள்ளது எனவே தங்களுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில்  தொடர்ந்து வியாபாரம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்


_______________________


விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


முதலமைச்சருடன், அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு


* 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை என தகவல்  * கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை என தகவல்


______________________


லடாக் செல்கிறார் ராணுவ தளபதி..! 


இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இந்திய போர் விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு


* ராணுவத் தளபதி நராவனே லடாக் எல்லைக்கு இன்று செல்லவுள்ள நிலையில் கண்காணிப்பு தீவிரம்


__________________



கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 19-ந் தேதி அமலான முழு ஊரடங்கு, வரும் 30-ந் தேதி வரை நீடிக்கிறது


இந்த 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1,000 நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்


அதன்படி வீடுகளுக்கே சென்று நிதி உதவி வழங்கும் பணி இன்று தொடங்கியது. சென்னையில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதி உதவி வழங்கினர்.


__________________



தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாளை அனைத்து ஆட்சியர்கள் உடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.