செய்திகள்
கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி -க்கு முதலிடம்!
***************
மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை அளித்தால், சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அமைச்சரவைக் கூடி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
****************
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தையல்காரர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரண உதவி அளித்து ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
*****************
இந்தியாவில் இருந்து திரும்பியவர்களால்தான் 85% கொரோனா பாதிப்பு: நேபாள பிரதமர் குற்றச்சாட்டு!
அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த ஏப்ரல்- மே மாதங்களில் 7,400 நேபாளிகள் மட்டும்தான் இந்தியாவில் இருந்து வந்தனர். மே- ஜூன் மாதங்களில் 2,22,000 பேர் இந்தியாவில் இருந்து திரும்பியுள்ளனர். அதே போல் தற்போது தினமும் சுமார் 8,000 பேர் இந்தியாவில் இருந்து நேபாளம் வருகிறார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் வருவதால், அவர்களை நிர்வகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தங்கியுள்ள நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் 14,454 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 13 நாடுகளில் வசிப்பவர்களில் 127 உயிரிழந்துள்ளனர்.