மும்பையில் மருந்து நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட கேஸ்கசிவு காரணமாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின், கோட்காபார், செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கேஸ் கசிவால் துர்நாற்றம் வீசுவதாக மும்பை மாநாகராட்சி அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து தீயணைப்பு குழுவை அப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்த மாநகராட்சி, கேஸ் கசிவு குறித்து ஆய்வு நடத்த ஆணையிட்டது. அவர்கள் நடத்திய ஆய்வில் கேஸ் கசிவானது கோவண்டி பகுதியில் உள்ள அமெரிக்க மருந்து நிறுவனத்தில் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கேஸ் கசிவுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.