திரைத்துறையில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது, உலகளவில் திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2021ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செஸ்ல் நகரில் நடைபெறுவதாக இருந்தது.
இதனிடையே உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு மக்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள், ரிலீஸ்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சில தயாரிப்பாளர்கள் ஒ.டி.டியில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகள், ஏப்ரல் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் படங்களை ஆஸ்கர் விருது குழுவுக்கு சமர்பிக்கும் காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்கர் விருது விழா, இரண்டு மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்பதாக அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.