இன்றைய முக்கிய நிகழ்வுகள்

 


 



பிலைசு பாஸ்கல்


பிலைசு பாஸ்கல் (Blaise Pascal, blɛːz paskal, (ஜூன் 19, 1623 - ஆகஸ்டு 19, 1662) ஓரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் சமய மெய்யியலாளர் ஆவார். கணிப்பான்களின் உருவாக்கத்திலும் பாய்மவியல் தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். எவன்ஜெளிஸ்டா டாரிசெல்லி (Evangelista Torricelli) என்ற ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற்றிடத்தின் பண்புகளை நிருபித்தார்.


கணித உலகம் முழுவதும் இன்று ஒரு அடிப்படை நிறுவல் முறையாகத் திகழும் உய்த்தறிதல் முறையும் (Method of Induction), கணித உலகம் மட்டுமன்றி எல்லா இயல்களிலும் மற்றும் வெளியுலக வாழ்க்கையிலும் அன்றாடம் பேசப்பட்டு மேலும் மேலும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் நிகழ்தகவு என்ற அடிப்படையில் தோன்றும் கருத்துகளும் தொடங்கியது இவருடைய படைப்புகளிலிருந்துதான்.


1642 ஆம் ஆண்டில் தனது 18ஆவது வயதில் வரலாற்றிலேயே முதல் கூட்டல் கணினியை உண்டாக்கினார் இதற்காக அவர் ஐம்பது வேறுப்பட்ட மாதிரிகளை உருவாக்கி இறுதியில் வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது.


1646 ல் , அவர் மற்றும் அவரது சகோதரி ஜாக்குலின் ஆகியோர் கத்தோலிக்க மத இயக்கத்தின் மூலம் அதன் எதிர்ப்பாளர்களாகக் குற்றம் சாட்டப்பட்டனர். 1651 ல் அவரது தந்தை இறந்தபிறகு 1654 ல் ஒரு ஆன்மீக அனுபவத்தைத் தொடர்ந்து அவர் விஞ்ஞான பணிகளைக் கைவிட்டார்.


இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக அழுத்தத்தின் SI அலகும், நிரல் மொழி ஒன்றும் பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.



சர் வில்லியம் கோல்டிங் (Sir William Gerald Golding, செப்டம்பர் 19, 1911 – ஜூன் 19, 1993) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் ஆவார். இவரது படைப்புக்களில் மிகவும் பிரபலமானது லார்ட் ஆஃவ் தி பிளைஸ் (Lord of the Flies) என்பதாகும். பட்டப்படிப்பைத் தொடர்ந்த காலத்திலேயே (1934) தனது முதற் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.


ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1961 இன் பின்னர் முழுநேர எழுத்தாளரானார். 1980 இல் ரைட்ஸ் ஆஃவ் பேசேஜ்(Rites of Passage) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்ற இவர் 1983 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் பெற்றார். 1988 இல் சர் பட்டம் பெற்றார். 1993 இல் காலமானா


✍ 1993ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் வில்லியம் கோல்டிங் மறைந்தார்.