3 மாத பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த தாய்


3 மாத பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்த தாய்.. மனதை நொறுக்கும் சம்பவம்


இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்த வருத்தத்தில் 3 மாத குழந்தையை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த மூங்கில்பாளையம் பகுதியில் குணசேகரன் - சங்கீதா தம்பதியர் வசித்து வந்தனர்.


இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் 9 வயதில் நிதர்சனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.


இந்நிலையில் 2ஆவதாக சங்கீதா கர்ப்பமான நிலையில் ஆண் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மீண்டும் அத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.