11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் மனு
திமுக கொறடா சக்கரபாணி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றமே அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மணிப்பூரில், கட்சி மாறிய ஷ்யாம் குமாரை, நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடை செய்த விவகாரத்தையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு வரும் 16ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.