நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி

 



 


இந்தியா கொண்டுவரப்பட்ட நிரவ் மோடி, மெகுல் சோக்ஸியின் ரூ.1350 கோடி மதிப்புள்ள நகைகள்! 


.பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி ரூயாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர்கள்


இவர்கள் இருவர் மீதும் இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடி கடந்த ஆண்டின் மத்தியில் கைதுசெய்யப்பட்டார். இவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழங்கு லண்டனில் நடந்துவரும் நிலையில், அவர் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


வங்கி மோசடியில் சிக்கி வெளிநாடு தப்பிய நீரவ் மோடி,மெகுல் சோக்ஸி ஆகியோர் ஹாங்காங்கில் பதுக்கி வைத்திருந்த 1350 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம், முத்துக்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் மும்பை கொண்டுவரப்பட்டுள்ளன


.