ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது மத்திய நிதி அமைச்சர்


நேற்று மட்டும் 1.87 லட்சம் கிராமங்களில் 2.33 கோடி பேருக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது


கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு கூடுதலாக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது-மத்திய நிதி அமைச்சர்


மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11002 கோடியை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது


அனைத்து தொழில்கள், வேலைகளில் பெண்கள் ஈடுபட அனுமதி - பெண்களை உரிய பாதுகாப்பு வசதிகளுடன் இரவுப் பணியில் ஈடுபடுத்த அனுமதி-மத்திய நிதி அமைச்சர்


தேசிய அளவில் ஒரே மாதிரியான ஊதியத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 


வெளிமாநிலங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன -மத்திய நிதி அமைச்சர்


தன்னிறைவு திட்டத்தின் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கான திட்டமொன்று அறிவிக்கப்படும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்


கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு கூடுதலாக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது


ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் சராசரி ஊதியம் ரூ.182ல் இருந்து இந்த ஆண்டு ரூ.202ஆக உயர்வு


அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது-மத்திய நிதி அமைச்சர்


சாலையோர வியாபாரிகள் எளிதாக கடன் பெற விரைவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்


ரூ.10 ஆயிரம் துவக்க நிலை செயல்பாட்டு மூலதனத்துடன் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்-மத்திய நிதி அமைச்சர்


முத்ரா திட்டத்தில் பெற்ற கடன்களுக்கு உரிய காலத்தில் தவணை செலுத்தினால் 12 மாதங்களுக்கு 2 சதவீதம் வட்டி தள்ளுபடி வழங்கப்படும்


வீட்டுக்கடன் மானியத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 21ந் தேதி வரை நீட்டிப்பு


நடப்பு நிதி ஆண்டில் வீட்டுக்கடன் மானியத்திட்டத்தில் 2.5 லட்சம் நடுத்தர குடும்பம் பலன் அடையும்-மத்திய நிதி அமைச்சர்


வேலை வாய்ப்பை ஊக்குவிக்க சிஏஎம்பிஏ நிதிக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு


சிஏஎம்பிஏ நிதி மூலம் நகர்புற, புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் வேலை வாய்ப்பு உருவாகும்
-மத்திய நிதி அமைச்சர்


கிஷான் கிரடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுடன் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்புவர்கள் சேர்ப்பு


விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் சுமார் 2.5 கோடி பேருக்கு கிஷான் கிரடிட் கார்டு மூலம் ரூ.2 லட்சம் கோடி கடன்-மத்திய நிதி அமைச்சர்


’தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் கீழ் மீனவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


மே 1 முதல் 14 வரை 800  சிறப்பு ரயில்களில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோரைச் சொந்த மாநிலங்களுக்கு ஏற்றிச் சென்றுள்ளதாக ரயில்வே தகவல்