**பெண்ணின் பிரசவத்திற்கு காவல் துறை வாகனத்திலேயே அழைத்துச் சென்ற பெண் காவல்ஆய்வாளர்**
சென்னை திருவொற்றியூர் டோல்கேட் உதயசூரியன் நகரைச்சேர்ந்த கலைவாணி வயது (21) க /பெ பிரேம்குமார்.
கலைவாணி நிறைமாத கர்ப்பிணியான நிலையில் அவருக்கு இடுப்புவலி ஏற்படவே 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்கள்.
ஆம்புலன்ஸ் வர தாமதிக்கவே அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி காவல் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரசவத்திற்காக கொண்டு சேர்த்துள்ளார்.
இதனால் நெகிழ்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர் கடவுள் போல உதவியதாக பெண்காவலருக்கு நன்றிகள் தெரிவித்தார்கள்.
மதுரை அருகே முதியவரை கொலை செய்து விட்டு மகன் மற்றும் மருமகள் நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூரில் 3ஆம் தேதி முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியன் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,610 லிருந்து 35,403ஆக அதிகரிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,075லிருந்து 1,147 ஆக உயர்வு
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,373 லிருந்து 8,889 ஆக உயர்வு
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல பிரத்யேகமான இணையதள பக்கத்தை தமிழக அரசு உருவாக்க உள்ளது.