இந்திய மாணவி நாசா செல்ல காலதாமதம் ஏன்


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி பர்ஹான், ஐஎஸ்எஸ் சர்வதேச விண்வெளி 2020 ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் கடந்த மார்ச் மாதமே நாசாவிற்கு அழைத்துச் செல்லப்பட இருந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக அவர் நாசா செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நாசா செல்வதற்கு போதிய வசதி இல்லாததால், அரசு உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் தன்னைப்போல் விண்வெளி கல்வியில் ஆர்வமுள்ள சகமாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.