அறிந்து கொள்வோம்..!!
🌟 மணலின் வேதியியல் பெயர் சிலிகான்-டை-ஆக்ஸைடு ஆகும்.
🌟 பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
🌟 இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
🌟 திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.
🌟 போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் ஆல்பர்ட் சாபின்.
🌟 இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படுபவர், ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ஆவார்.
🌟 யுரேனஸ் கிரகம் சூரியனை சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.
🌟 வாசனை பொருட்களின் ராணி என அழைக்கப்படுவது, ஏலக்காய்.
🌟 பாம்பு இல்லாத தீவு, ஹவாய் தீவு.
🌟 நிலவில் அழுதால் கண்ணீர் கீழே விழாது.
🌟 பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை தூங்குகிறதாம்.
🌟 தமிழ்நாட்டில் கல்லணைதான் மிக பழமையான அணைக்கட்டு.
🌟 தமிழகத்தின் கடல் நுழை வாயிலாக தூத்துக்குடி விளங்குகிறது.
🌟 வில்லியம்கோட்டை 1696ல் கல்கத்தாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.
🌟 ஈரான் நாட்டின் தலைநகர், டெக்ரான்.
🌟 அட்லாண்டிக் சால்மனின் மோப்ப உணர்வு, நாயைவிட 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.
🌟 பெண்களால், ஆண்களை விட இரண்டு மடங்கிற்கு மேல் வலிகளை தாங்கி கொள்ள முடியும்.
🌟 சார்க் சிறைச்சாலை உலகிலேயே மிகச்சிறிய சிறைச்சாலையாகும்.
🌟 ரஷ்யாவின் தேசிய விலங்கு கரடி.
மோகனா செல்வராஜ்