நாளை முதல் ஜூன் 30 வரை ஐந்தாம் கட்ட ஊரடங்கு


 


நாளை முதல் ஜூன் 30 வரை ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


நாளை முதல் வாடகை, டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேருடன் இ- பாஸ் இன்றி மண்டலங்களில் பயணிக்கலாம்


நாளை முதல் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம்.


சைக்கிள் ரிக்‌ஷாக்களுக்கும் நாளை முதல் அனுமதி வழங்கலாம்
சென்னையில் நாளை முதல் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.
சென்னையில் 8ம் தேதி முதல் ஓட்டல், டீக்கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி.


சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும்
வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்  ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்கள் மேல் இருக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகபட்சமாக 40 நபர்களுடன் செயல்பட அனுமதி
சென்னையில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி


வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் இயங்க அனுமதி.  ஆட்டோக்களில் 2 பயணிகள் பயணிக்க அனுமதி.



உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அனுமதிக்க வேண்டும்
5 பேருக்கு மேல் ஒரு கடையில் கூடக் கூடாது,  8ம் தேதி முதல் உட்கார்ந்து சாப்பிட அனுமதி
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் இரவு 8 மணி வரை இயங்கும்

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது