ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசி

 


        ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 - பாகம் 02


🌹🌹🌹🌹

ராகு கேது பெயர்ச்சி 2022-2023...!!


ரிஷபம் :


எந்த வேளையிலும் மகிழ்ச்சியுடனும், புன்சிரிப்புடனும் காணப்படும் ரிஷப ராசி அன்பர்களே...!!


ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் ரிஷப ராசிக்கு விரய ஸ்தானம் என்னும் பனிரெண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள். 


பலன்கள் :


செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். மனதில் இருந்துவந்த தாழ்வுமனப்பான்மை சிந்தனைகள் குறைந்து, எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


பொருளாதாரம் :


பணவரவில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


உடல் மற்றும் ஆரோக்கியம் : 


உடல் மற்றும் ஆரோக்கியத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடந்த கால நினைவுகளின் மூலம் மன அழுத்தங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.


பெண்களுக்கு :


சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்தியோகஸ்தர்

களுக்கு :


உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் படிப்படியாக குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை கிடைக்கப் பெறுவீர்கள்.


வியாபாரிகளுக்கு :


வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். செய்யும் தொழிலில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.


விவசாயிகளுக்கு :


பயிர்களின் வளர்ச்சிக்கு உண்டான மருந்துகளை சரியான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் லாபத்தை அதிகப்படுத்த இயலும். சந்தைகளின் விலைக்கேற்ப பயிர்களை தேர்வு செய்வது நல்லது.


அரசியல்வாதிகளுக்கு :


சமூகம் தொடர்பான பணிகளில் சுறுசுறுப்புடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களை அடிக்கடி மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


கலைஞர்களுக்கு :


பொறுமையான பேச்சுக்களும், மற்றவர்கள் மனதை நோகடிக்காத ஆரோக்கியமான பேச்சுக்களும் உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.


மாணவர்களுக்கு :


கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.


நன்மைகள் :


நடக்க இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியின் மூலம் மனதளவில் ஏற்பட்டிருந்த சில குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும்.


கவனம் :


உத்தியோகம் சார்ந்த பணிகளிலும், செயல்பாடுகளிலும் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.


வழிபாடு :


வெள்ளிக்கிழமை

தோறும் குலதெய்வ வழிபாட்டை செய்து வர செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.


மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


 நாளை  மிதுனம் ராசி தொடரும்


திருமதி மோகனா செல்வராஜ்