கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு* மெட்ரோ ரயில் போக்குவரத்து இயக்கம்

 


       👉மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் வரும் 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கொரோனா ஊரடங்கு தளர்வு வகை 1, வகை 2 மற்றும் வகை 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றுள்ள வகை 1-ல் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உள்ளது.


இந்த 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்த செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.


கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்துள்ள வகை 3-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளது.


இந்த 4 மாவட்டங்களில் கீழ்கண்ட கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.


👉மளிகை, பலசரக்குள், காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்க அனுமதி.


👉காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனைச் செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்கலாம்.


👉உணவகங்கள் மற்றும் அடுமனைகள் மற்றும் மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 9 மணிவரை செயல்படலாம்.


👉மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு9 மணிவர இயங்கலாம்.


👉அரசு அலுவலகங்கள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.


👉சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கலாம்.


👉தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.


👉காலணி விற்பனைச் செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படலாம்.


👉வாகனங்கள் விற்பனைச் செய்யும் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை அனுமதி.


👉பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகள், சலவை கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படலாம்.


👉தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.


👉செல்போன் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7மணி வரை செயல்பட அனுமதி.


👉சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை.


👉அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதனை வசதி இல்லாமல் ஒரே நேரத்தில் 50 % வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.


👉திரைப்படம் மற்றும் சின்னதிரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதி.


👉வகை மூன்றில் வரும் 4 மாவட்டத்திற்குள் மட்டும் பொது பேருந்து போக்குவரத்து குளிர் சாதன வசதி இல்லாமல் 50 % பயணிகளுடன் இயங்க அனுமதி.


👉மெட்ரோ ரயில் போக்குவரத்து 50 % பயணிகளுடன் இயங்கலாம்.


👉வாடகை வாகனங்கள், டேக்ஸி மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவில்லாமல் செல்ல அனுமதி.


*தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

முதல்வர் அறிவிப்பு.


  🙏முக கவசம் உயிர் கவசம்🙏


நிருபர் பாலாஜி