நடிகர் சிவகுமார் குடும்பம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் முதல்வர் மு.க. ஸ்டாலின்யிடம் வழங்கினார்

 


           நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1கோடி நிவாரணம்


 நடிகர் சிவகுமார், அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 கோடி நிவாரண நிதியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் (12-05-21) அன்று நேரில் வழங்கினர்.  

செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், 'மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உடனே காப்பாற்றியாக வேண்டும். அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எங்களால் முடிந்த சிறு உதவியாக 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம்.

மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டிக்கொள்ளுங்கள். தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 வருடங்களாக சந்தித்து இருக்கிறேன். இப்போது அவரது அரசியல் வாரிசை சந்தித்ததில் அளவற்ற மகிழ்ச்சி' என்று தெரிவித்தார்.


                நிருபர் பாலாஜி