கார்த்திகை மாத மண்டலபூஜை

 



சபரிமலை அய்யப்பனின் கார்த்திகை மாத மண்டலபூஜையை தரிசிக்க விருப்பும் பக்தர்களுக்கன ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை 1ந்தேதியன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து  விரதம் இருப்பது வழக்கம்.


சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று  முதல் துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி மாலை அணிந்து சபரிமலை செல்பவர்கள், நவ14ந்தேதி வரை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


முன்பதிவு செய்தவர்களில் நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களும் வார இறுதி நாட்களான சனி மற்றும்  ஞாயிற்று கிழமைகளில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரித்துவித்துள்ளது.


மேலும் முன்பதிவிற்கு www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் சபரிமலை கோவில் நடை வரும் நவ15ந்தேதி திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.


நவ,.15ந்தேதி முதல்  41 நாட்கள் மண்டலபூஜைக்கு பின் டிச.,27ந்தேதி கோவில் நடை சாத்தப்படும் என்று தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.