தமிழகத்தில் வெகுவாக குறைந்து வரும்(21.10.2020) கொரோனா தொற்று பாதிப்பு

 



தமிழகத்தில் மேலும் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,97,116-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.


அதன்படி, சுகாதாரத்துறை 20.10.2020  வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதன் மூலம் மொத்த பாதிப்பு 6,97,116 -ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,50,856 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


20.10.2020  மட்டும் 4,301 பேர் குணமடைந்துள்ளனர்.   தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,780 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் நேற்று ஒரே நாளில் 845 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,92,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் இதுவரை 91,93,849 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 20.10.2020  மட்டும் 81,782 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 


இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 194 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 35,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,20,882 பேர் ஆண்கள், நேற்று மட்டும் 1,836 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,76,202 பேர் பெண்கள், நேற்று மட்டும் 1,250 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


20.10.20 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.  வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது.