கூடாரத்தை காலி செய்த சீனா


சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண விவகாரத்தில் மேலும் 6 போலீசாரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் 60, மகன் பெனிக்ஸ் 31 ஆகியோர் போலீஸ் தாக்குதலில் கோவில்பட்டி சிறையில் இறந்தனர். மதுரை உயர் நீதிமன்ற கிளைஉத்தரவுப்படி, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தப்பட்டது.


விசாரணைகொலை வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



இந்திய - சீன எல்லையில், காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டனர். கடந்த மாதம், 15ல், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை, நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.


அப்போது ஏற்பட்ட மோதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் ஞாயிறன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் எல்லையிலிருந்து ராணுவ வீரர்களை விலக்கி வருகிறது சீனா.