இந்திய, சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்திற்குமிடையே, மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் திடீரென இன்று லே பகுதிக்கு விரைந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மோடியின் வருகை மற்றும் ராணுவத்தினருடன் அவரது ஆலோசனைகள், முக்கியமான ஐந்து விஷயங்களை சீனாவுக்கு மட்டுமில்லாது உலக நாடுகளுக்கு கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டை எப்படியாவது மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக முன்னேறிக் கொண்டு இருக்கிறது சீன ராணுவம். முன்பும் இதுபோன்ற முயற்சிகள் இருந்த போதிலும், இப்போது சீனா மிகவும் ஆவேசமாக இந்திய எல்லைகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதை தடுத்த போதுதான், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் மோடி எல்லைக்குச் சென்றுள்ளது, இந்தியா தனது எல்லைகளை விட்டு கொடுக்காது, இந்த பிரச்சினையை எளிதில் விடாது என்ற ஒரு தகவலை மறைமுகமாக சீனாவுக்கும் உலக நாடுகளுக்கும் பதிய வைப்பதற்காகத்தான்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 சதவீதம் அளவுக்குதான் இருக்கிறது. எனவே, சீன ராணுவத்துக்கு செலவிடும் தொகையை ஈடுகட்டும் அளவுக்கு இந்தியாவும் செலவுசெய்து மோதலை விரும்பாது என்பது பொதுக் கருத்தாக இருக்கிறது. ஆனால் இந்தியா எதற்கும் தயார் என்ற மெசேஜ் மோடியின் லடாக் வருகையின் மூலம் தெரியப் படுத்தப்பட்டுள்ளது
சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில் இதுவரை இன்ஸ்பெக்டர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வழக்கில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் முன் சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதி அளித்த சாட்சியம் தான் முக்கியமாக கருதப்படுகிறது
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் நடந்த கொடூரத்தை நேரில் கண்டவர் ரேவதி என்பதால் அவருடைய சாட்சியின் காரணமாகத்தான் இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ரேவதிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு போலீஸ் துறையில் இருந்து எந்த விதமான மிரட்டலும் வரக்கூடாது என்றும் ஏற்கனவே மதுரை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் தற்போது இந்த வழக்கில் சாட்சியம் அளித்த தலைமைக்காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவால் ரேவதியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது
.