தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு:


தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு:


கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.


_____________________


கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர்


______________________________


மதுரையில் நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் இடங்களில் அரசுப் பேருந்துகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் இயங்காது - மதுரை ஆட்சியர் வினய்


சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்கள் இன்று (ஜூன் 23) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


____________________________


சென்னையில் இதுவரை 30 ஆயிரம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்


கொரோனா சிறப்பு நிவாரணத் தொகையை வீடுகளுக்குச் சென்று அளிக்க தவறும் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் - பிரகாஷ்


____________________


தமிழக முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 10 மணிக்கு காணொளி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.


தமிழக அரசு விளக்கம்:


இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக பரிந்துரையின் பேரிலேயே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மக்களுக்கு தரப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


____________________


தமிழக அரசு உத்தரவு:


மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


_______________________


கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு:


பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்தப் பணிகளை வரும் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழக அரசு அரசாணை வெளியீடு:


தமிழகத்தில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. வரன்முறை படுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 21ஆம் தேதியுடன் நிறைவடைந்ததையடுத்து, கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


_______________________


இந்திய வரலாற்றில் முதல்முறை:


இந்திய வரலாற்றில் முதல்முறையாக வானிலை எச்சரிக்கைகளை பெற கேரள அரசு, மூன்று தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.


____________________________


ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு:


உலகம் முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஏதுவாக ரூ.1 கோடி வரையிலான கடனுக்கு உடனடி ஒப்புதல் வழங்குவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.


_________________________


தேசிய பேரிடர் நிவாரண நிதி:


தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு தனிநபர்களும், நிறுவனங்களும் நன்கொடை வழங்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.


___________________________


உலகச் செய்திகள்


7 ஆண்டுக்கு பிறகுதான் குடியுரிமை:


நேபாள நாட்டு ஆடவரை அயல்நாட்டு பெண் திருமணம் செய்து கொண்டால், அந்த அயல்நாட்டு பெண்ணுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகே குடியுரிமை வழங்கப்படும் சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


_________________________


செப்டம்பர் 6ஆம் தேதி பொதுத்தேர்தல்:


தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் செப்டம்பர் 6ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்த இடைக்கால அதிபர் ஜூனைன் அனெஸ் ஒப்புதல் அளித்துள்ளார். 


__________________________


பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை:


இந்தியாவின் மிகப்பெரிய சமயத் திருவிழாக்களில் ஒன்றான பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடைபெற்றது.